ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டியை வைத்தே மெகா ஹிட் படங்களை கொடுத்து அவரது ஆஸ்தான இயக்குனர் என அறியப்படுவர் தான் இயக்குனர் சித்திக்.. ஆனால் அதற்காக மோகன்லாலுக்கு இவர் வேண்டடஹவர் என எண்ணிவிடாதீர்கள்.. மோகன்லாலை ஆரதிப்பவ்ர்களில் ஐவரும் ஒருவர்.. அன்றைய 'வியட்நாம் காலனி' படத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் வெளியான 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்' படம் வரை மோகன்லாலுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர்.. அப்படிப்பட்டவர், மோகன்லால் மீது சேற்றை வாரி இறைக்கும் நபர்களை பொறாமைக்காரர்கள் என்றுதான் கூறுகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லால் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் சித்திக். மோகன்லால் யாரையும் எந்தவித உள்நோக்கத்துடனும் காயப்படுத்துபவர் அல்ல.. அவ்வளவு ஏன் படப்பிடிப்பு தளத்தில் அவர் கத்திப்பேசியோ டென்சனாகியோ நான் பார்த்ததில்லை.. அதேபோல தான் இக்கட்டான சூழலில் இருப்பது அறிந்தால் பதறாமல் அந்த பிரச்சனைகளை தள்ளி நின்று அணுகுவார்.. அதேபோல அவரால் ஒரு காரியம் வெற்றி பெற்றதாக கொண்டாடப்பட்டாலும் அதை தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டார். அவருடைய உணர்வுகளை எளிதாக கட்டுப்படுத்தும் பழக்கம் உள்ளதால் தான் இன்று 'தி கம்ப்ளீட் ஆக்டர்' என்கிற பெயருக்கு சொந்தமான நடிகராக அவரால் மாற முடிந்துள்ளது.. மற்றபடி அவர்மீது கோபம் கொண்டு துவேசிப்பவர்கள் கூட, மோகன்லால் மீதும், அவர் புகழ்மீதும் உள்ள பொறாமை காரணமாகவே அப்படி செய்கிறார்களே தனிப்பட்ட விரோதம் எதுவும் காரணமாக இருக்காது” என கூறியுள்ளார் இயக்குனர் சித்திக்