'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். பழசிராஜவாக மம்முட்டி நடித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ரந்தமூழம்' என்கிற வரலாற்று நாவலையும் ஹரிஹரன் படமாக்கப்போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் படம் தயாரிப்பு நிலைக்கு வருவதான அறிகுறியே சில வருடங்களாக தெரியாமல் இருந்தது.. இந்நிலையில் தான் இயக்குனர் ஹரிஹரன். மோகன்லால் அதிக சம்பளம் கேட்டு தன்னுடைய படத்தில் நடிப்பதை புறக்கணித்தார் என பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.. அது கூட ஒரு காரணம் தான் என்றாலும், மோகன்லால் அவ்வளவு சம்பளம் கேட்டதற்கும், படம் நிறுத்தப்பட்டதற்கும் இன்னும் ஒரு நியாயமான காரணம் இருக்கவே செய்தது.. அதை அப்போது வாசுதேவன் நாயர் சொல்லாமல் மறைத்துவிட்டாரா, அல்லது சொல்ல மறந்துவிட்டாரா என தெரியவில்லை.. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரை அறியாமலேயே அந்த காரணம் வெளிப்பட்டுள்ளது..
அதாவது இந்தப்படத்தை கிட்டத்தட்ட 'பாகுபலி' படம் போல இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்தாராம் வாசுதேவன் நாயர்.. அவராக முடிவு செய்யவில்லை. இதற்கான திரைக்கதையை அவர் எழுதி முடித்தபோது, படத்தின் ஸ்கிரிட் தான் இரண்டு பாகங்கள் வேண்டுமென கேட்டது. 'பழசிராஜா' படத்தை தயாரித்த கோகுலம் கோபாலன் தான் இந்தப்படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இரண்டு பாகங்களாக தயாரிக்கும் வேண்டும் என்றால் அந்த அளவுக்கு தன்னால் கோடிகளை கொட்டமுடியாது என கைவிரித்துவிட்டாராம். அதனாலேயே இந்தப்படம் கைவிடப்பட்டு மலையாள ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியது.