ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பை நடிகைகளின் ஆண் நண்பர்கள் கலாச்சாரம் பற்றிப் பேசினால் நமக்கே குழம்பிவிடும். யார் யாருடன் நட்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவே தெரியாது. அந்த நட்பும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் தெரியாது. காதல் என்பார்கள் பின்னர் பிரிவு என்பார்கள். திருமண நிச்சயம் வரை செல்வார்கள், அப்புறம் திருமணமே கூட நின்றுவிடும். அதையும் மீறி திருமணம் நடந்தால் எப்போது பிரிவார்கள் என்பதையும் சொல்ல முடியாது.
ஹிந்தித் திரையுலகத்தில் மட்டும்தான் அப்படியா என்று பார்த்தால் சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்திலும் பல கூடல்கள், மோதல்கள், பிரிவுகள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. நீண்ட நாட்களாக காதலில் இருந்தவர்களாக 'பாகுபலி' பட வில்லன் ராணா டகுபட்டியும், த்ரிஷாவும் இருந்தார்கள். அதன்பின் திடீரென தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயம் வரை சென்று திருமணத்திற்கு முன்பே பிரிந்தார் த்ரிஷா. அதன் பின் மீண்டும், ராணாவுடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டார் என்றார்கள். ஆனால், அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் 'டேட்டிங்' போய் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரேயா, இப்போது த்ரிஷாவின் முன்னாள் காதலரான ராணா டகுபட்டியுடன் 'டேட்டிங்' போய் புகைப்படக்காரர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார். ஸ்ரேயா மட்டும் சிரித்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க, ராணா டகுபட்டி முறைத்துக் கொண்டு நின்றதுதான் இப்போது டோலிவுட்டில் பேசப்படும் பரபரப்புத் தகவலாக இருக்கிறது. இருவருக்கள்ளும் நட்பு மட்டும்தானாம், காதல் எல்லாம் இல்லையாம்...வழக்கம் போல் நம்புவோமாக....