தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் தான் நடிக்கும் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் வராத ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயங்களில் இருந்தும் முற்றிலுமாக விலகியே இருப்பவர் நயன்தாரா. அவரை எந்த ஒரு தமிழ் பத்திரிகையாளர்களும் சந்தித்துவிடவே முடியாது. இவ்வளவு ஏன், அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது.
அந்த அளவிற்கு தன்னைச் சுற்றி ஒரு வளையம் அமைத்து கொண்டுள்ளார். ஆனால், தன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாளிகளுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு. அவரைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் குறிப்பிட்ட மலையாள நிருபரிடம் மட்டுமே தகவலைக் கொடுத்து பரப்பி விடுவார். இருந்தாலும் நயன்தாராவுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தன்னை ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக நினைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். வழக்கமான டூயட் பாடும் கதாநாயகி கதாபாத்திரம் என்றால் நடிக்க மறுத்துவிடுகிறார் என்கிறார்கள். அதனால் தான் தற்போது தொடர்ந்து அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அறம் படத்திற்கு நயன்தாரா தான் மறைமுகத் தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கும் கோபி நயினார், கத்தி பட கதை விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நயன்தாராவுக்கும் கஜினி படத்தில் இருந்தே தகராறு. முருகதாஸைப் பழி வாங்கவே அவர் கோபி நயினார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். படத்தின் கதை, ஒரு ஆழ்துளைக் குழாயில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற கலெக்டராக இருக்கும் நயன்தாரா என்னவெல்லாம் முயற்சி செய்கிறார் என்பதுதான். இந்தக் கதை பிடித்துப் போன நயன்தாரா, தயாரிப்பாளர் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், நான் முழு ஆதரவு தருகிறேன் எனச் சொல்லித்தான் கோபி நயினாரை இயக்குனராக ஆக்கினாராம்.
ஒரு பக்கம் ஒருவருக்கு ஆதரவு கொடுத்ததாகவும் ஆயிற்று, கஜினி படத்தில் தனக்கு முக்கியத்துவம் தராமல் அசினுக்கு முக்கியத்துவம் கொடுத்த முருகதாஸைப் பழிவாங்கியதாகவும் ஆயிற்று என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் நயன்தாரா. இவரின் இந்த அரசியலைப் பார்த்து கோலிவுட்டே வியந்து போயிருக்கிறதாம்.