‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்திய சினிமா வரலாற்றிலேயே பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2.O படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார்.
இதனிடையே 2.O படத்தின் பர்ஸ்ட் லுக் விழா மும்பையில் பிரமாண்டமாய் நாளை (நவ., 20-ம் தேதி) நடைபெற இருக்கிறது. மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோஸில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் இவ்விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக ரஜினி, சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். எப்போதுமே எந்தவொரு விஷயத்தில் புதுமையை விரும்பும் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஷயத்திலேயே தனது புதுமையை தொடங்கிவிருக்கிறார். நிச்சயம் நாளை மாலை முதல் 2.O பற்றிய விஷயங்கள் தான் டிரெண்ட்டிங்கில் இருக்க போகிறது.