இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிவாய் படத்தை அடுத்து அஜய் தேவ்கன், தனது அடுத்தப்படமான ‛பாத்சாகோ'விற்கு தயாராகிவிட்டார். மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் ஜோடியாக இலியானா நடிக்கிறார். கூடவே இன்னொரு முக்கியமான ரோலில் இஷா குப்தா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கியிருக்க வேண்டியது. ஆனால் ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால் படப்பிடிப்பு தேதி தள்ளிபோய் உள்ளது. அதன்படி வருகிற நவ., 29ம் தேதி முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர். முன்னதாக இப்படத்திற்கான வேலைப்பாடுகள் துவங்கியுள்ளன. குறிப்பாக அஜய் தோற்றம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவைகளை மாற்றும் பணி நடந்து வருகிறது. அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அஜய். ‛பாத்சாகோ' படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு மே 12ம் தேதி ரிலீஸாகிறது.