மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
'போடா போடி, நானும் ரௌடிதான்' ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. 'எஸ் 3' படத்தின் நடித்து முடித்த பிறகு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்ட சூர்யா, அதில் முதல் அறிவிப்பான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பை நேற்று ஆரம்பித்துவிட்டார். அடுத்து செல்வராகவனுடன் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
நேற்று ஆரம்பமான முதல் நாள் படப்பிடிப்பு பற்றிய அனுபவத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஸ்கூல் பேக் மாட்டிக் கொண்டு 'காக்க காக்க' படத்தைப் பார்த்திருக்கிறேன். இன்று சூர்யா சாருக்காக 'ஆக்ஷன்' என சொன்னேன். இந்தக் கனவு இப்படி நனவாகும் என்று என்றுமே நினைத்ததில்லை,” எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு பதிலாக சூர்யா, “முதல் நாள் ஷுட்டிங்கை நேசித்தேன் இயக்குனர்... இந்தக் குட்டிப் பையன் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளார்.
விக்னேஷ் சிவன் என்றால் சும்மாவா, தமிழில் முன்னணி ஹீரோயினான நயன்தாராவுடன் இணைந்து பேசப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளாரோ, அது தெரியாதா சூர்யா உங்களுக்கு ?.