சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 24 சங்கங்கள் உள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சிக்கு தேர்தல் நடக்கும், 24 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வாக்களித்து பெப்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது ஜி.சிவா தலைவராகவும், கே.ஆர்.செல்வராஜ் செயலாளராகவும் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ந் தேதியுடன் முடிந்துவிட்டது. சங்க விதிகளின்படி பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் அறிவித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பதவி காலம் முடிந்த உடன் அவர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை பெப்சி தேர்தல் பற்றி அறிவிக்கவில்லை. இதுகுறித்து பெப்சிக்கு உட்பட்ட தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் சங்கம் பெப்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் "நிர்வாகிகள் பதவிகாலம் முடிந்தும் தேர்தல் நடத்தப்பாடாதது ஏன்?. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கத்துக்கும் தகவல் தெரிவிக்காதது ஏன்? சங்க விதிகளுக்கு முரணாக நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்து வருவது ஏன்? எனவே தேர்தலை உடனடியாக நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளது.