Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அறம்' கதை: குழந்தையின் உயிரை காக்க போராடும் கலெக்டர் நயன்தாரா

19 நவ, 2016 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Story-reveled-about-Nayantharas-Aram-movie

நயன்தாரா நடித்து வரும் அறம் படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் காக்கா முட்டை விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, ஈ.ராம்தாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஓம்.பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி.நயினார் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ராமநாதபுரம் பகுதியில் நடந்துள்ளது. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் கதை இதுதான்.


ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தனது படிப்பால், உழைப்பால் ஐ.ஏ.எஸ் பாசாகி கலெக்டர் ஆகிறார். அதனால் அவருக்கு ஏழைகள் மீது பாசம் அதிகம். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக வரும் நயன்தாரா. அங்கு நிலவும் கொடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல முயற்சிகள் எடுக்கிறார். ஏரி குளங்களை சீரமைக்கிறார், வாய்கால் அமைக்கிறார். இதனால் அவற்றை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும், அரசியல்வாதிகள், உள்ளூர் பெரும் புள்ளிகளின் பகையை சம்பாதிக்கிறார். அவரை டிரான்ஸ்பர் செய்ய பல வழிகளில் முயற்சிக்கிறார்கள்.


இந்த நிலையில் ஒரு ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை விழுந்து விடுகிறது. குழந்தையை மீட்க ஸ்பாட்டுக்கே செல்லும் நயன்தாரா அங்கு குழந்தையை காப்பாற்ற போராடுகிறார். ஆழ்துளை கிணறு ஒரு அரசியல் பெரும் புள்ளியின் இடத்தில் இருக்கிறது. கிணறு தோண்டி அதை மூடாமல் விட்டது அவருடைய தவறு. இதனால் அவரை கைது செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அந்த பெரும்புள்ளி பெற்றவர்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட நினைக்கிறார்.


குழந்தையை காப்பாற்றும் முயற்சி ஒரு பக்கம், அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது ஒரு பக்கம் என செயல்படுகிறார் நயன்தாரா. அதில் அவர் வெற்றி பெற்றாரா? என்பதுதான் கதை. கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற நயன்தாரா துடிப்பதற்கு காரணமான ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கிறது. இதுதான் பட வட்டாத்தில் கசிந்த கதை. இதில் கிணற்றில் விழுந்த குழந்தையின் தாயாக சுனு லட்சுமி நடிக்கிறார். அந்த குழந்தையின் சகோதரர்களாக காக்கா முட்டை விக்னேஷ், ராஜேஷ் நடிக்கிறார்கள். அரசியல்வாதியாக ஈ.ராம்தாஸ் நடிக்கிறார்.


படம் பற்றி அதன் நிர்வாக தயாரிப்பாளர் சவுந்தர் பைரவி கூறியதாவது: இந்த படம் கிராம பின்னணியை கொண்ட கதை. நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். அவர் எப்போதும் அறத்தின் பக்கம் நிற்கிறவர். அதன் மூலம் பல நல்ல காரியங்களை செய்ய முயற்சிக்கிறார். அதற்கு பல தடைகள். இறுதியில் அறம் எப்படி ஜெயிக்கிறது என்கிற கதை. படத்தின் காட்சிகள் ஒரு பரபரப்பான சூழ்நிலையிலேயே இருக்கும் தினமும் 1500 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். என்றார்.


"உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் அறம். மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும். எனவே தான் நாங்கள் படத்திற்கு அறம் என்று தலைப்பிட்டோம். மாவட்ட ஆட்சியர் என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா வழங்கி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.


எங்கள் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. விரைவில் எங்களின் அறம் திரைப்படம் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது " என்கிறார் இயக்குநர் கோபி நயினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in