அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தலைப்பை படித்து விட்டு முகம் சுழிக்கத் தோணுதா? சத்தியமா இது ஒரு படத்தோட தலைப்புதான். தலைப்பு பற்றி இயக்குனர் ந.கிருஷ்ணகுமாரின் விளக்கம் இது... "சிலர் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறாக இருந்தாலும் எடுத்த முடிவு என்னோடது என்று உறுதியாக இருப்பார்கள். நான் எடுத்து முடிவு கோணலா இருந்தாலும் அது என்னோடது. இந்த அர்தத்தில்தான் தலைப்பு வைத்திருக்கிறோம்" என்கிறார்.
ஒரு தாத்தாவிடம் பெரும் சொத்து இருக்கிறது. அதை தனது பேரன்களுக்கு சரிசமமாக பிரித்து கொடுக்க முடிவு செய்கிறார். அவரது குடும்பத்துக்கு வந்த மருமகள்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு குடும்பம் சிதைந்து விட்டதால் பேரன்கள் மூவரும், மூன்று உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டு வந்தால் சொத்தை பிரித்து தருவதாக சொல்கிறார். மூன்று பேரன்களும் மூன்று சகோதரிகளை தேடிச் செல்லும்போது நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்களை காமெடியாக சொல்கிற படம். மூன்று பேருக்கும் மனைவிகள் கிடைத்தார்களா? தாத்தாவின் சொத்து பேரனுக்கு கிடைத்ததா என்பது படத்தின் முடிவு.
கிரிஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட் என்ற புதுமுகங்களுடன் டெல்லி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அபிநவ், சைந்தவி உள்பட பலர் நடித்துள்ளனர். வல்லவன் இசை அமைத்துள்ளார், மா.பெ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.