ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த 11-ந்தேதி வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஏதோ ஒரு வகையில் தாமதங்கள் வந்து கொண்டேதான் இருந்தது. அதாவது, படப்பிடிப்பை ஒருவாரம் நடத்தியபோது திடீரென்று என்னை அறிந்தால் படத்தை இயக்க கெளதம்மேனனை அழைத்தார் அஜீத். அதனால் அந்த படத்தை அவர் முடித்து விட்டு வரும் வரை வெயிட் பண்ணினார் சிம்பு. அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடைசிகட்டத்தில் இருந்தபோது, தனக்கான சம்பளம் வராததால் தள்ளிப்போகாதே பாடலில் நடிக்க மறுத்து வந்தார் சிம்பு.
அதனால் அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தை நிறுத்தி வைத்து விட்டு, தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இறங்கினார் கெளதம்மேனன். அந்த படத்தை தொடங்கிய பிறகு சிம்புவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறுபடியும் சில நாட்கள் படபிடிப்பை நடத்திய கெளதம்மேனன், நவம்பர் 11-ந்தேதி படத்தை வெளியிட்டார். படத்திற்கு நல்ல விமர்சனங்களும், நல்ல ஓப்பனிங்கும் கிடைத்தது.
முக்கியமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்றபோதிலும், எதிர்பாராத அளவுக்கு தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தனர். அதனால் 3 நாட்களிலேயே கிட்டத்தட்ட 22 கோடி வரை வசூலித்ததாக சொன்னார்கள். ஆனால், கெளதம் மேனன், அச்சம் என்பது மடமையடா படத்தை இன்னும் நிறையவே எதிர்பார்த்தாராம். வசூல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், குறைவான வசூலே கிடைத் துள்ளதாக கூறியுள்ளார் கெளதம்மேனன்.