டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா 'கொலையுதிர் காலம்' படம் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். இந்தப் படத்தை 'உன்னைப் போல் ஒருவன், பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்குகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். நயன்தாராவின் பிறந்த நாளான நேற்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள்.
100 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள யுவன் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். “ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் ஆரம்பத்தின் மூலம் உற்சாகமாக உள்ளேன். பூஜா பிலிம்ஸ், சக்ரி டோலெட்டி ஆகியோருடன் இணைந்து நயன்தாரா நடிக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தை செயல்படுத்துகிறோம்,” என யுவன் தெரிவித்துள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜாவின் அப்பா இளையராஜாவும் அந்தக் காலத்தில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்த படங்களை அவர் தயாரித்திருக்கிறார். அதன் பின் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.
யுவன் இப்போது தயாரிப்பாளராக மாறியதற்கு தனுஷ், ஆர்யா மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஏற்கெனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மாறி வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறிவிட்டார். இப்போது யுவனும் இசையமைப்பது தவிர படங்களைத் தயாரிக்கவும் இறங்கிவிட்டார். அடுத்து அவரும் நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.