'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளில் ஹீரோக்கள் போன்று அடுத்தடுத்து தனது இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிரடியாக வெளியிட்டுள்ளார். தற்போது நயன்தாரா, கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதில் முக்கியமாக டோரா, இமைக்கா நொடிகள், அறம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த படங்கள் அனைத்திலும் ஒருபவர்புல்லான வேடத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதிலும் ‛அறம்' படத்தில் ஒரு அதிரடியான கலெக்டர் வேடத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அறம் படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் அடுத்த அதிரடியாக நயன்தாராவின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் தான், நயன்தாரா, பில்லா 2 படத்தின் இயக்குநர் சக்ரி டொலேட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த செய்தி உண்மையாகியுள்ளது. சக்ரி-நயன்தாரா இணையும் படத்திற்கு ‛கொலையுதிர் காலம்' என்று பெயரிட்டுள்ளனர்.
படத்தின் போஸ்டரே மிரட்டலாக உள்ளது. ரத்த கறையுடன் ஒரு கை நயன்தாராவின் வாயை மூடியபடி இருக்கிறது. நயன்தாரா மிரட்சியுடன் பார்கிறார். படத்தின் தலைப்பு வேறு ‛கொலையுதிர் காலம்' என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது படம் இந்தப்படம் நிச்சயம் ஒரு த்ரில்லர் படம் போன்று தெரிகிறது.
கொலையுதிர் காலம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.