ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்களில் தற்போது வெற்றியடைந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான். இசையமைப்பாளராக இருந்த அவருக்கு நடிக்கும் ஆசையைக்காட்டியதோடு, அவரை வைத்து சொந்தப்படம் தயாரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
பின்னர் என்ன காரணத்தினாலோ அந்தப் படத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டார். அதனால் வெறுத்துப்போன ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னை ஏ.ஆர்.முருகதாஸ் அவமானப்படுத்திவிட்டதாக எண்ணி புலம்பியதோடு, ஹீரோவாக நடித்தே தீருவது என்று பென்சில் படத்தில் நடித்தார்.
பின்னர் நடித்த டார்லிங் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்போது பிசி ஹீரோவாகிவிட்டார். தற்போது ஒரு டஜன் படங்களில் கமிட்டாகியுள்ள அவர், 'மின்சார கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
மியூசிக்கல் சப்ஜெக்ட்டாக இப்படம் உருவாகவிருக்கும் இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகிறதாம். கதைக்கு ஏற்ற மாதிரி இப்போது 'சர்வம் தாள மயம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார்.