ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
1963ம் ஆண்டு வெளிவந்த படம் கற்பகம். இந்தப் படத்தில்தான் கே.ஆர்.விஜயா ஹீரோயினாக அறிமுகமானார். அவருக்கு இந்த வாய்ப்பு விஜயகுமாரியால் தான் கிடைத்தது. படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். அப்போது நம்பர் ஒன் நடிகையாக இருந்தார் விஜயகுமாரி. அவரே கற்பகம் கேரக்டரில் நடிப்பது என்று முடிவானது. அவரிடம் ஒப்பந்தம் போடச் சென்றனர்.
அப்போது விஜயகுமாரியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் பல படங்களில் மேட் பார் ஈச் அதர் ஜோடியாக நடித்துக் கொண்டும் இருந்தார்கள். "விஜயகுமாரி கற்பகமாக நடிப்பதாக இருந்தால் அவருக்கு ஜோடியாக நான்தான் நடிப்பேன் சம்மதமா?" என்று கேட்டார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆனால் கற்பகம் ஜோடியாக ஏற்கெனவே ஜெமினி கணேசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் "இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயாவை வைத்து படத்தை எடுப்பேன்" என்று கூறிவிட்டு வந்து விட்டார்.
அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த கே.ஆர்.விஜயாவை அழைத்து வந்து கற்பகமாக நடிக்க வைத்தார். கற்பகம் அழுத்தமான கேரக்டர் அதை ஒரு புதுமுகத்தால் செய்ய முடியாது என்றே எல்லோரும் சொல்லி வந்தனர். ஆனால் கே.ஆர்.விஜயா கற்பகமாவே வாழ்ந்து காட்டினார்.
இதேபோன்று இன்னொரு முறை விஜயகுமாரிக்கு எம்.ஜி.ஆர் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது ராஜகுமாரியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் "எஸ்.எஸ்.ஆர் என் தம்பி. தம்பி மனைவியுடன் எப்படி ஜோடியாக நடிக்க முடியும்" என்று கூறிவிட்டார்.