ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் கைரளி சேனலில் நடிகை ஊர்வசி ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசுகிற நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ஆண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல ஆண்கள் தங்களை ஊர்வசி திட்டி அவமானப்படுத்தியதாக மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாரின் மீது வருகிற டிசம்பர் 9ந் தேதி விசாரணை நடத்துகிறது.