‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நலனுக்கான நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பெண்களின் உரிமை குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக உலக பெண்கள் அமைப்பு பெங்களூருவில் அவனுக்காக அவள் என்ற தலைப்பில் 3 நாள் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. பிரபலமான பிஷப் காட்டன் பள்ளியில் நடந்து வரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா தனுஷ் பேசியதாவது:
ஒரே நாள் இரவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழித்து மாற்றத்தை கொண்டு வந்து விட முடியாது. குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்கள் பிறக்கும் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். இந்த உலகத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சமம். ஆண்களுக்கான அனைத்து உரிமையும் பெண்களுக்கு உண்டு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதல்களும், உளவியல் ரீதியான தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இதற்கான மாற்றத்தை பெண் குழந்தைகள் வளர்ப்பில் இருந்தே தொடங்க வரவேண்டும். உறுதியான பணிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இதனை சாதிக்க முடியும். அது ஒவ்வொரு தாயின் கையிலும் இருக்கிறது. என்றார்.