ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான ஒரு தெய்வம் தந்த பூவே -என்ற வைரமுத்துவின் பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி சின்மயி. தமிழ்நாட்டு பாடகியான இவர், பல வேற்று மொழி நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பின்னணி-டப்பிங் என பிசியாக இருக்கும் அவர் சில சமயங்களில் டுவிட்டரில் சில கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவர் பொது விசயங்கள் பற்றி எந்த கருத்துக்களும் வெளியிடுவதில்லை.
இந்நிலையில், தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட போது, ஒருநாள் அவரிடம் டீ குடைப்பதற்கு கூட பணம் இல்லையாம். அவரிடமிருந்து 500 ரூபாய்க்கு யாருமே சில்லரை தரவில்லையாம். ஆனால் அப்போது, ஒரு ஏடிஎம் காவலாளி தன்னிடமிருந்து 20 ரூபாயை சின்மயிக்கு கொடுத்தாராம். அதன்பிறகுதான் அந்த பணத்தை வைத்து டீ வாங்கி குடித்தாராம் சின்மயி. இதை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.