தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாக்யராஜின் சித்து பிளஸ்-2 படத்தில் நடித்த சாந்தினி, தற்போது தமிழ், தெலுங்கு என்று நிறைய படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் கதாநாயகி, சில படங்களில் செகண்ட் ஹீரோயினி, சில படங்களில் கெஸ்ட் ரோல் என்று கிடைக்கிற வேடங்கள் எதையும் அவர் விடுவதில்லை. அந்த வகையில், கைநிறைய படங்கள் வைத்திருக்கும் அவர், தற்போது மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் மேஜர் கெளதம் இயக்கியுள்ள கண்ல காச காட்டப்பா என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் பற்றி சாந்தினி கூறும்போது, வில் அம்பு படத்திற்கு நான் ஹீரோயினாக நடித்த இந்த படம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வருகிறது. தற்போது நாட்டில் நிலவி வரும் கறுப்பு பணம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை காமெடி கலந்து இயக்கியிருக்கிறார் மேஜர் கெளதம். இந்த படத்தில் நடிக்க முதலில் என்னை அணுகியபோது நான் நடிப்பது பற்றி முடிவெடுக்கவில்லை. பின்னர் இந்த படத்தின் டீமை பார்த்தபோது நல்ல நண்பர்களாக பழகினர். அதன்பிறகுதான் நடிக்க சம்மதித்தேன்.
மேலும், இதுவரை நான் எந்த படத்திலும் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் இந்த படத்தில் முதன்முறையாக ஒரு பாடலில் கிளாமராக நடித்துள்ளேன். அந்த பாடலில் இளவடட ரசிகர்களை கவரும் வகையில் நடனமாடியிருக்கிறேன் என்று கூறும் சாந்தினி, கதைக்கும், காட்சிக்கும் அவசியப்படும்போது ஓரளவு கிளாமராக நடிக்க தான் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கிறார்.