ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி ரிஸ்க் எடுத்துள்ளார் என நடிகர் விவேக் ஓபுராய் கூறியுள்ளார். கடந்தவாரம் நாட்டு மக்களுக்கு பிரதமர் அளித்த ஒரு பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்கவும் நடவடிக்கையாக பிரதமர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார். சிரமங்கள் பல இருந்தாலும் மக்கள் அதை ஏற்று கொண்டுள்ளனர். பிரதமரின் முடிவுக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாலிவுட்டின் பிரபல நடிகரான விவேக் ஓபுராயும் பிரதமரின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவேக் ஓபுராய் கூறியிருப்பதாவது... ''ரூபாய் நோட்டு விவகாரத்தில், நம் நாடு ஒரே நேரத்தில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல் மாறியிருக்கிறது. நமது பிரதமர் மோடி மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளார். நாட்டின் நலனுக்காக அரசியல் கட்சியினரையும் தாண்டி அவர் ரிஸ்க் எடுத்துள்ளார் என எண்ணுகிறேன்'' என்று கூறியுள்ளார்.