விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
அனிருத் இசையமைப்பில், தனுஷ், எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளிவந்து நேற்றுடன் 5 வருடங்கள் முடிந்துவிட்டது. 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி யு டியூபில் வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே வைரலாகி இந்தியாவை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை யு டியூப் வீடியோ இணைய தளத்தைப் பற்றி கொஞ்சம் மட்டுமே அறிந்து வைத்திருந்த தமிழ்த் திரையுலகினர் அதன்பின் எந்த ஒரு வெளியீடு என்றாலும் அதை முதலில் யு டியூபில் வெளியிட்டபின்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்துமே யு டியூபில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. நேரடி ஒளிபரப்பு வரை அது இப்போது வளர்ந்து நிற்கிறது.
கொல வெறி பாடலை இதுவரை யு டியூபில் 11 கோடியே 9 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். 4 லட்சத்து 54 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த வீடியோ பக்கத்திற்கு வந்து ரசிகர்கள் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கொல வெறி பாடலின் 5 வருட நிறைவையொட்டி அதற்கு இசையமைத்த அனிருத் நேற்று டிவிட்டர் வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதே சமயம் நேற்று காலையில் அவர் டிவிட்டரில் கொல வெறி பாடலை நினைவுபடுத்தி பதிவிடும் போது கூட அந்தப் பாடலை எழுதி, பாடிய தனுஷைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இந்த 5 வருடங்களில் 13 ஆல்பங்களை ரசித்ததற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என அனிருத் கூறியுள்ளார்.
'கொல வெறி'யின் இந்த 5 வருடப் பயணத்தைப் பற்றி பாடலை எழுதிப் பாடிய தனுஷும், அந்தப் பாடல் இடம் பெற்ற '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷும் டிவிட்டரில் எந்த ஒரு பதிவிடலையும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 வருடப் பயணத்தில் அனிருத்தும், தனுஷும் இவ்வளவு சீக்கிரத்தில் பிரிவார்கள் என்பதை அவர்களே கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.