சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட் நடிகை வித்யாபாலன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் வித்யாபாலன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரையும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவதில்லை. விழாக்களுக்கு தனித்தனியாக வருகிறார்கள். இதை வைத்து இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
''நானும் சித்தார்த்தும் பிரியப் போவதாக வரும் செய்திகளை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டேன். அதற்காக சினிமாவை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? நான் என் பாதையில் பயணிக்கிறேன். சித்தார்த் அவர் பாதையில் பயணிக்கிறார். வீட்டுக்கு வந்தால் நாங்கள் கணவன், மனைவியாக இருப்போம்.
எங்களுக்குள் இருக்கும் அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டால் போதும். விழாக்களில் இடுப்பில் கைபோட்டு ஜோடியாக நடந்து, செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டு, ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதனை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டியதில்லை. நான் நடிகை, அவர் தொழிலதிபர், உலகம் எங்களை அப்படிப் பார்த்தால் போதும். கணவன், மனைவி என்பது எங்களுக்குள் இருக்கட்டும்'' என்கிறார் வித்யா பாலன்.