சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்து புகழ் பெற்றவர் முகேஷ் ராவல். அதன்பிறகு சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்தார். மும்பையில் வசித்து வந்த முகேஷ் நேற்று முன்தினம் வங்கியில் ரூபாய் நோட்டை மாற்றச் செல்வதாக கூறி காட்கோபருக்கு சென்றுள்ளார். அன்று முழுவதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
இந்த நிலையில் மும்பே மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள காந்தவலி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் உடல் துண்டு துண்டாகி சிதறி கிடந்தது. ரெயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முகேஷ்தான் என்பதை உறுதி செய்தனர்.
66 வயதான முகேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரிடமிருந்த பணத்தை பறிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கிக் கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.