Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நயன்தாரா எனக்கு விரோதியல்ல; கண்டிப்பா கல்யாணத்துக்கு போவேன்: சிம்பு

16 நவ, 2016 - 23:51 IST
எழுத்தின் அளவு:
i-will-go-to-nayan-marriage-says-simbu-she-is-my-friend

புதுப்பட ரிலீஸ் வெற்றி, பெண் பார்க்கும் படலம், எப்போதும் டென்ஷன், நயன்தாரா திருமணம் மற்றும் தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களை பற்றி, சிம்புவுடன் ஒரு கலகல சந்திப்பு:

அச்சம் என்பது மடமையடா, ரிசல்ட் எப்படி?


இன்று வரை, பல தியேட்டர்கள், ஹவுஸ்புல் என, செய்திகள் வருகின்றன. இது, சந்தோஷமான விஷயம். இதற்காக, என் ரசிகர்களுக்கு நன்றி; இது என் தனிப்பட்ட வெற்றி அல்ல; ஒட்டுமொத்த டீமின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.


இந்த படத்தில், பைக் தான், மையக் கருவாக இருந்தது; அதுகுறித்து...


பைக் ஓட்ட பிடிக்கும்; ஆனால், பயப்படுவேன். விபத்து ஏற்படுமோ என்ற பயம் தான். சமீபகாலமாக, பைக் ஓட்டுவதை நிறுத்தி விட்டேன். கார் தான் அதிகமாக ஓட்டுவேன். அச்சம் என்பது மடமையடா படத்தை பொறுத்த வரையில், பைக் ஓட்ட வேண்டி இருந்ததால், பைக்கை வீட்டுக்கு வரவைத்து, படப்பிடிப்புக்கு, தினமும் பைக்கில் தான் போய் வருவேன். இதனால், படப்பிடிப்பின் போது எளிதாக இருந்தது.


படத்தில் வந்ததுபோல் உங்கள் சகோதரியின் தோழிகளுடைய அனுபவம் எதுவும் இருக்கா.?


அய்யோ, அதை இப்பவும் நினைத்து பார்க்கிறேன், எங்கள் வீட்டுக்கு சகோதரியின் தோழிகள் நிறைய பேர் வருவாங்க ஆனால் என்னை பேசவே விட மாட்டாள் என் சகோதரி. நான் பார்த்தால் கூட அவளுக்கு கோபம் வரும். என் தோழிகளிடம் நீ பேச கூடாது என்பார். ஒரு ஹலோ மட்டும் சொல்லிட்டு போவேன். என்னால் தோழிகளிடம் எதுவும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று என்மேல் ரொம்ப அக்கறை எடுத்து கடைசி வரை பேசவிடவில்லை.



ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பற்றி சொல்லுங்க.?


உண்மை தான், இந்தப்படத்தின் பெரிய பலமே அவரின் இசை தான். அவருடைய உழைப்பு அபரிதமானது. பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசையாகட்டும் அனுபவித்து, ரசித்து இசையமைத்துள்ளார்.


ஹீரோயின் மஞ்சிமா மோகன் பற்றி.?


புதுமுகம் ஹீரோயின், ஆனால் அவர்கிட்ட நான் கண்ட ஆச்சர்யம், கொடுத்த வசனங்களை அப்படியே உள்வாங்கி இரண்டு, மூன்று டேக்கிலேயே சரியாக பேசிவிடுவார்கள். அது அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். அவர் தமிழில் அழகாக பேசி, நடித்தது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருக்கு நான் வாழ்த்து சொன்னேன்.


இந்தப்படத்தில் டென்ஷன் ஆன விஷயம்.?


பொதுவாக படங்களில் நடிக்கும் போது டென்ஷன் இருக்கும். இந்தப்படத்தை பொறுத்தமட்டில் படத்தின் பிற்பகுதியில் தினம் தினம் டென்ஷன் இருந்தது. படத்தின் காட்சிப்படி நான் கத்தணும், கோபப்படணும், டென்ஷன் ஆகணும், இதனால் எனக்கு இரத்த கொதிப்பு வருகிற உணர்வை இருந்தது. வீட்டில் போய் தூங்க முடியாது, தலை வலிக்கும், இந்தப்படம் முடியும் வரை நான் அப்படியே தான் இருந்தேன். ஒருக்கட்டத்தில் ஏன் இப்படியொரு படத்தில் நடித்தேன் என்று கூட யோசித்தேன். இந்த படத்தில் இருந்து வெளியே வர சிரமமப்பட்டேன். கெளதம் ஏதோ புதிதாக முயற்சி செய்தார், நான் முடிந்த வரை நடித்தேன், அவர் எடுத்த முயற்சியில் வெற்றி தான்.



படப்பிடிப்பில், ஹீரோயின்களுடன் ஜாலியாக பேசிய அனுபவம் உண்டா?


சொன்னா நம்ப மாட்டீங்க. படப்பிடிப்பில், ஹீரோயின்கள் கூட அதிகமா பேசவே மாட்டேன். ரொம்ப தெரிந்து, பழகியிருந்தால் கொஞ்சம் பேசுவேன். த்ரிஷா எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவங்க கூட கொஞ்சம் பேசுவேன்; மற்றபடி, ஹலோ... ஹாய்... என்பதற்கு மேல், யாருடனும் அதிகம் பேசியது இல்லை.


படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது சர்ச்சையை ஏற்படுத்தியதே?


என்னால், காலை, 6:00 மணிக்கு போயிட்டு, மாலை, 6:00 மணிக்கு எல்லாம் வரமுடியாது. நான் ரெடியாவதற்கு முன், அந்த கேரக்டருக்கு என்னை தயார் படுத்த வேண்டும். என்னால், டைம் மெயின்டென் செய்ய முடியாது என்பது உண்மை; எனக்கு அது வராது. ஆனால், எத்தனை மணிக்கு செட்டுக்கு வந்தாலும், அன்றைக்கு திட்டமிட்ட பகுதிகளை முடித்து கொடுத்து விட்டு தான் போவேன்; இதை யாருமே, வெளியில் சொல்வது இல்லை; இப்பவும் சொல்கிறேன்; என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது; நான் மனிதன்.


நம்பர் - 1, நம்பர் - 2 ஆசை எல்லாம் இருக்கா?


இதுக்கு முன்னாடி எனக்கு அந்த ஆசை இருந்திருக்கு. ஒரு சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டது உண்டு. ஆனால், இப்போது அப்படிப்பட்ட ஆசை எதுவும் இல்லை. ரசிகர்களுக்காக படத்தில் நடிக்க வேண்டும்; அவ்ளோதான். நம்பர் 1, நம்பர் 2 என்ற நம்பிக்கை எல்லாம் கிடையாது.


சில விஷயங்களை சரிசெய்து விட்டால், நீங்கள் நல்ல மனிதர் ஆகிடுவிங்களாமே; அந்த சில விஷயம் என்ன?


எனக்கு மட்டும் இல்லை; உலகத்தில் உள்ள பலருக்கும் இதைப்போல சரிசெய்தால், கடவுள் ஆகிடுவாங்களே. பிழைகள் தானே மனிதனை அடையாளம் காட்டுகின்றன. அந்த பிழைகளை நான் தவறாக எடுத்துக்கவில்லை. அதற்காக, முயற்சி எடுக்க மாட்டேன்னு சொல்லவில்லை. என்னால் முடிந்தால் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வேன்.


கொஞ்ச நாளாகவே, சிம்பு அமைதியா இருக்காரே?


சில நாள் இல்ல; பல நாள் அமைதியா இருந்திருக்கேன், சம்பந்தமே இல்லாமல் ஒரு பிரச்னை வரும்; அதையும் சந்தித்திருக்கிறேன்.


உங்களுக்கு பெண் பார்ப்பதாக...?


எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்; அது எப்போது நடக்குமோ, அப்போது தான் நடக்கும்.


உங்களுக்கு வரும் பெண், எப்படி இருக்க வேண்டும்?


பெண், பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாது; அப்படி வைத்தால் தான் சிரமம்.


ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து?


கள்ள பணம் வச்சிருந்தா தான் பிரச்னை. நான் எந்த பணமும் வச்சிக்கிறதில்லை. எல்லாத்தையும் அம்மாகிட்ட கொடுத்திடுவேன். வேணும்போது வாங்கிடுவேன்.நீங்க எதாச்சும், மோடி விஷயமா கேட்டுட்டு, அடுத்த இன்டர்வியூக்கு போய்டுவீங்க; அதன்பின், நான் எதாவது தெரியாமல் சொல்லி, அது பெரிய விவகாரத்தில போய் முடிஞ்சிடும்; மோடி பற்றி பேசும் அளவுக்கு, நான் ஒர்த் ஆன ஆள் இல்லை; அரசியல் பற்றி யெல்லாம் அவ்வளவு தெரியாது.


நயன்தாரா - விக்னேஷ் திருமணம் அடுத்த ஆண்டு இருக்கலாம் என்ற செய்தி வருகிறது; நீங்க திருமணத்துக்கு போவீங்களா?


ஒரு முடிவோட இருக்கீங்க போல; இரண்டு பேருமே என் பெஸ்ட் பிரண்ட்ஸ்; அவங்களை பற்றி எப்படி நான் தப்பா பேசுவேன்; என்ன நடந்தாலும் எனக்கு சந்தோஷமே; இரண்டு பேருக்கும் நான் விரோதி இல்லை; என்னை கூப்பிட்டால் எப்படி போகாமல் இருப்பேன்; கண்டிப்பாக போவேன்.


பீப் சாங் விவகாரம் பற்றி.?


திரும்பவும் சொல்றேன், எனக்கும் சமூக அக்கறையும், பொறுப்பும் இருக்கு. நான் பீப் சாங்கை ஒருவருக்கும் கொடுத்து கேட்க சொல்லவில்லை, பீப் சாங் சரி என்றும் சொல்ல மாட்டேன். தவறும் சொல்ல வரல, அது இப்ப உங்க பிரச்னை, இது எல்லாவற்றையும் தாண்டி தானே இங்கே வந்திருக்கேன்.


சிம்பு - அனிருத் நட்பு பற்றி சொல்லுங்க.?


என்றைக்கும் நல்லாவே இருக்கும். அவரை சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும். எங்க நட்பு எப்பவும் மாறாது. ரம் படத்தில் பாட கூப்பிட்டார், பாடினேன், அவ்வளவு தான்.




அப்பா மாதிரி உங்களால் ஏதாச்சும் வர முடியுமா..?


ஏதாச்சும் இல்லை, எதுவுமே பண்ண முடியாது. அவர் பயங்கர திறமைசாலி, டிஆர் டிஆர் தான், எஸ்டிஆர் எஸ்டிஆர் தான்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in