ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் கேரளா சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர். அதற்காக இவர் ஏதோ சினிமாவுக்காக தியாகம் செய்தவர் என நினைத்துவிட வேண்டாம்.. ஒரு படத்தை ஓட்ட தயாரிப்பாளர்கள் என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் முட்டுக்கட்டை போட்டு அவர்களை சிரமத்திற்கு ஆளாக்குவதே இவரது தலையாய வேலை. எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும் அந்த மேடையில், பல படங்களின் மோசமான கலெக்சன் குறித்து அப்பட்டமாக போட்டு உடைத்துவிடுவார்.
அதாவது தயாரிப்பாளர்களுக்கு 60%, விநியோகஸ்தர்களுக்கு 40%.. இரண்டாவது வரம் 55-45, 3வது வாரம் 50-50 என படிப்படியாக மாறும். ஆனால் இனிமேல் முதல் வாரத்தில் இருந்தே 50-50 என சமபங்கு கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளாராம் லிபர்ட்டி பஷீர்.. இது ஒன்றும் இப்போது கேட்கப்பட்ட ஒன்றல்ல.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இதை வலியுறுத்தி வருகிறோம் என்கிறார் லிபர்ட்டி பஷீர்.