ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வளர்ந்து வரும் நடிகை சஞ்சிதா ஷெட்டி. எங்கிட்ட மோதாதே படத்தில் அக்மார்க் திருநெல்வேலி பெண்ணாக பாவாடை தவாணியில் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி ரம் படத்தில் அதற்கு நேர் எதிரான ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறார். இதில் நடித்திருப்பது பற்றி சஞ்சிதா ஷெட்டி கூறியிருப்பதாவது:
‛‛ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்த வகையில் நான் ரம் திரைப்படத்தில் நடித்திருக்கும் ரியா கதாபாத்திரம், அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன். இதில் நான் ஒரு திருட்டுக்கூட்டத்துக்கு தலைவியாக நடிக்கிறேன். சூது கவ்வும் படத்தில் கிளாமராக நடித்தேன். எங்கிட்ட மோதாதே படத்தில் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறேன். இதில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறேன். எல்லா கேரக்டரிலும் என்னை நிரூபித்திருப்பதைப்போல் ஆக்ஷ்ன் கேரக்டரிலும் நிரூபிப்பேன். திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக எங்களின் ரம் திரைப்படம் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
ரம் திரைப்படம் உட்பட இதுவரை நான் நடித்த 9 படங்களுமே, திறமையான உதவி இயக்குநர்களாலும், குறும்பட இயக்குநர்களாலும் உருவாக்கப்பட்டது என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கின்றது'' என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.