‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டுப் மாடிப்படியில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் ஒரு மாதம் வரை தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினார். அவரின் சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் அப்படியே நிற்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி டில்லியில் 2.ஓ படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அமெரிக்கா சென்று அங்கு சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து திரும்பினார். தமிழ் சினிமாவின் இரண்டு இமயங்களுக்கும் அடுத்தடுத்து உடல் ரீதியான பின்னடைவு. வெளியில் சொல்ல முடியாத மன ரீதியான பிரச்னைகள் இதைவிட அதிகம்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, சில தினங்களுக்கு முன்பு திடீரென உலக நாயகன் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கமலும் ரஜினியின் உடல் நலம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் இருவரும் தனிமையில் மனம் விட்டு பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது தூங்காவனம் படத்தின் இயக்குனரும் கமலின் உதவியாளருமான ராஜேஷ் எம்.செல்வா மட்டுமே உடன் இருந்தார்.
இதுகுறித்து கமல் தரப்பில் கேட்டபோது "இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்றுதான். இந்த முறை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். மற்றபடி இதில் முக்கியத்தும் எதுவும் இல்லை" என்றார்கள்.