நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சின்னத்திரை சீரியல்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறினார். சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 11வது பொதுக்குழுவில் பேசிய விஜய்சேதுபதி இதை குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:
ஒரு காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் சோறு போட்டது சின்னத்திரைதான் என்பது பலருக்கு தெரியாது. நான் நடிப்பு வாய்ப்பு கேட்டு தெருவில் அலைந்தபோது என்னை அள்ளி அணைத்துக் கொண்டது சின்னத்திரை சீரியல்தான். அண்ணன் சி.ஜே.பாஸ்கர் இயக்கிய பெண் தொடரில் சீதா மேடத்தின் மகனாக நடித்தேன். எனக்கு நடிக்கவே தெரியவில்லை. பொறுமையாக சொல்லிக் கொடுத்தது சின்னத்திரை. அந்த நாளில் சின்னத்திரை சம்பளத்தை வைத்துதான் என் குடும்பம் சாப்பிட்டது. அந்த நன்றி உணர்வு எப்போதும் எனக்கு இருக்கும். அதன் பிறகுதான் கூத்துப்பட்டறைக்கு சென்று நடிப்பு கற்று சினிமாவுக்கு சென்றதெல்லாம் நடந்தது.
சில முக்கியமான கருத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். சின்னத்திரையின் கண்டன்டுகள் (கதைகரு) ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்கிறார்கள். இயக்குனர்கள் புதிது புதிதாக சிந்திக்க வேண்டும். கதை, காட்சி, அமைப்பு, நடிப்பு எல்லாவற்றிலும் நாம் அடுத்து கட்டத்துக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் இன்றைய போட்டியில் நாம் ஜெயிக்க முடியும்.
டப்பிங் சீரியல்களால் நம் கலைஞர்கள் வேலை இழந்து வருவது வருத்தமாக இருக்கிறது. டப்பிங் சீரியல் ஒளிபரப்புவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற சேனல்களை நான் கேட்டுக் கொள்கிறேன். சின்னத்திரை நடிகர்கள் ஒற்றுமையோடு இருந்து தங்களின் உரிமை¬யும், வசதிகளையும் பெற வேண்டும். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.