மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கே.பாலச்சந்தரின் பிரபலமான படங்களில் ஒன்று எதிர்நீச்சல். அதில் நாகேஷ் நடித்திருந்த மாடிப்படி மாது கேரக்டரும், எஸ்.பி.முத்துராமன் நடித்திருந்த மலையாள நாயர் கேரக்டரும், ஜெயந்தி நடித்த மனநோயாளி கேரக்டரும் காலத்தை கடந்து நிற்பவை.
எதிர்நீச்சல் திரைப்படமாவதற்கு முன்பு கே.பாலச்சந்தரால் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. அதைத்தான் பின்னர் படமாக்கினார். நாடகத்தில் நடித்த நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சவுகார் ஜானகி, ஸ்ரீகாந்த் ஆகியோர் அதே கேரக்டரில் சினிமாவிலும் நடித்திருந்தார்கள். நாடகமாக நடக்கும்போது எதுவும் சொல்லாத விமர்சகர்கள் படம் வெளிவந்ததும். இந்தக் கதை ஜெயகாந்தன் எழுதிய யாருக்காக அழுதான் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இது பரவலாக விவாதிக்கப்பட்டது.
அப்போது நாகேஷ் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்நீச்சல் படத்தை ஜெயகாந்தனுக்கு சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டினார். படம் பாதி முடிந்திருந்த நிலையில் வெளியே வந்த ஜெயகாந்தன் பத்திரிகையாளர்களை அழைத்து "என் கதைக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
ஆனாலும் எதிர்நீச்சல் ஒரு நாடகத்தின் தழுவல் தான். காஞ்சன் ரங்கா என்ற வங்கமொழி நாடகம் ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது. அதை கே.பாலச்சந்தர் பார்த்தார். மற்றவர்களுக்காகவே வாழ்ந்து மறையும் ஒரு இளைஞனின் கதை அந்த நாடகம். மற்றவர்களுக்காகவே உழைக்கும் அந்த ஏழை இளைஞன் ஏன் தோற்க வேண்டும் வாழ்க்கையில் ஜெயிப்பதாக காட்டலாமே என்று கே.பாலச்சந்தர் யோசித்ததில் உருவானதுதான் எதிர்நீச்சல் கதை. அதனால்தான் படத்தில் நாகேஷ் படித்து பெரிய உத்யோகத்துக்கு போவதாக கதை முடியும்.