ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் ஓரிரு நடிகைகள் தான் சோடைப்போவார்கள். பலர் வெற்றி பெற்று விடுவார்கள். அந்த வகையில், சமீபத்திய வரவுகளில் மியா ஜார்ஜ், நிகிலா விமல் போன்ற சில கேரளத்து நடிகைகள் பெரிதாக ஜொலிக்கவில்லை. என்றபோதும், கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்து வந்த மஞ்சிமா மோகனுக்கு அந்த படத்தில் நடித்து வந்தபோதே விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் மற்றும் கெளரவ் இயக்கும் படம் என இரண்டு படங்கள் புதிதாக ஒப்பந்தமாகிவிட்டன.
இந்நிலையில், தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் வெற்றி பெற்றிருப்பதால், கொஞ்சம் தாமதித்தால் வெற்றியை முன்வைத்து மஞ்சிமா சம்பளத்தை உயர்த்தி விடுவார் என்று கடந்த சில தினங்களில் அவரை இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்து விட்டனர். சிலர் கதை சொல்லிவிட்டு அவரது பதிலுக்காக காத்திருக்கின்றனர். முக்கியமாக, கீர்த்தி சுரேஷின் கால்சீட்டுக்காக காத்திருந்த ஒரு படமும் இப்போது மஞ்சிமா மோகன் பக்கம் திரும்பியிருக்கிறது. இதனால் மின்னல் வேகத்தில் வளர்ந்து நிற்கும் கேரளத்து நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு பலத்த போட்டி நடிகையாக மஞ்சிமா மோகன்தான் உருவெடுப்பார் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.