'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சமூக வலைதளத்தில், கவர்ச்சியான, செல்பி படங்களை வெளியிட்டு, அமலா பால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு, ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழ் திரையுலகில், பிசியாக இருந்த நடிகை அமலாபால், திடீரென காதல் வலையில் சிக்கி, இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது, கணவரை பிரிந்து வாழும் அவர், மீண்டும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், 25வது பிறந்த நாளை கொண்டாடிய அமலாபால், கடந்த வாரம் மலேசியா சென்றார். கோலாலம்பூரில் இருந்த போது, கவர்ச்சி, செல்பி எடுத்த அமலாபால், அந்த படங்களை, தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு சிலர் பாராட்டை தெரிவித்தாலும், பலர் கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனர்.
அதில், அவர்கள் கூறியதாவது: உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை, நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. நீங்கள் மீண்டும் நடிக்க வந்தது மகிழ்ச்சியே. உங்களுடைய நடிப்பு திறமைக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன. அமலாபால் மீது, நாங்கள் தனி மரியாதை வைத்து உள்ளோம். நீங்கள் என்றால், இது தான் என, ஒரு அழகான பிம்பத்தை வைத்துள்ளோம். அதை கெடுக்கும் வகையில், இதுபோன்ற கவர்ச்சி படங்கள் வெளியாவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.