Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூபாய் நோட்டுகள் வாபஸ் : விஜய் வரவேற்பு, ஆனாலும் வருத்தம்!

15 நவ, 2016 - 10:16 IST
எழுத்தின் அளவு:
I-welcome-Centres-demonetisation-says-Actor-Vijay

ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றது வரவேற்கப்பட வேண்டிய விஷயம், பிரதமரின் முயற்சி பாராட்டத்தக்கது. அதேசமயம் தற்போது நிலவும் சில பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.


கறுப்பு பணத்தை ஒழிக்கவும், போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ஒரு அதிரடியான உத்தரவை கடந்தவாரம் பிறப்பித்தார். பிரதமரின் இந்த துணிச்சல் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சாமான்ய மக்கள் கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சரி செய்யும் முயற்சியில் மத்திய மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.


வரவேற்கத்தக்கது


இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்.... ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விஷயம் வரவேற்கத்தக்கது. ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக எடுக்கப்படும் முடிவுகளால் சில பாதிப்புகள் வரத்தான் செய்யும். நம் நாட்டில் 20 சதவீதம் பணக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்களில் சிலர் செய்யும் தவறுகளால் 80 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு எடுத்த இந்த முடிவு சரி தான். இந்த முடிவால் கண்டிப்பாக நாட்டின் பொருளாதாரம் உயரும் என நம்புகிறேன்.


சிரமங்களை தவிர்த்திருக்கலாம்


அதேசமயம், நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஒரு பாட்டி தன் பேத்தியின் திருமணத்தை நடத்த முடியாமல் தற்கொலை செய்ய முயற்சித்ததாக கேள்விப்பட்டேன். அதேபோன்று மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒருவர் சிகிச்சை பெற முடியாமல் போனதாக அறிந்தேன். இதுபோன்ற விஷயங்களை தவிர்த்து இருக்கலாம்.


மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், யாரும் பண்ணாத ஒரு பெரிய முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கான வழியை எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது வேண்டுகோள். தற்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. அதேசமயம் கிராமங்கள், மூத்த குடிமக்கள் படும் கஷ்டங்களை தீர்க்க மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு விஜய் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in