டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கு என்று தனி இடத்தை பிடித்த இயக்குநர்களில் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒருவர் . இவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றியை அள்ளி குவித்த படங்கள் ராம் லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி இந்த இரண்டு படங்களிலும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சஞ்சய் லீலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛பத்மாவதி.
இப்படத்தில் பன்சாலியின் ஆஸ்தான நடிகர்களாகிவிட்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். படத்தில் தீபிகா, பத்மாவதி ரோலிலும், ரன்வீர், அலாவுதீன் கில்ஜி ரோலிலும் நடிக்க உள்ளார்கள். இன்னொரு முக்கியமான வேடத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார். ‛பத்மாவதி படத்தில் தீபிகாவிற்கு கணவராக ஷாகித் கபூர் நடித்து வருகின்றார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷாகித்துடன் நடித்த அனுபவம் பற்றி தீபிகா கூறினார்.
இதைப்பற்றி தீபிகா மேலும் கூறியதாவது....." ஷாகித்துடன் இணைந்து நடிக்க எனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட விழாக்களில் கூட எல்லோரும் எங்கள் படம் பற்றி கேட்பார்கள். ஷாகித்தும், நானும் இணைந்து நடிப்பதை பற்றி பேசி இருக்கிறோம். இப்படத்தில் நாங்கள் இணைந்து நடிப்பதற்காக தான் இத்தனை ஆண்டுகள் இணைந்து பணியாற்றவில்லை போல. இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சிகளையும் சஞ்சய் லீலா அருமையாக இயக்கியுள்ளார்" என்றார்.
பத்மாவதி படம் அடுத்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.