தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமா மற்றும் டிவி நடிகை ரேகா மோகன் (45) திரிசூரில் உள்ள தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
1990 களில் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக பேசப்பட்டவர் ரேகா மோகன். இவர் உத்யானபலகன், நீ வருவோலம், ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மம்மூட்டி, மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் திரிசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் மோகன் மலேசியாவில் உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இரண்டு நாட்களாக இவரது வீடு பூட்டி கிடந்ததுள்ளது. இவர் சூட்டிங்கில் பிசியாக இருப்பதால் வீடு பூட்டி இருப்பதால் அக்கம் பக்கத்தினர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரேகாவின் கணவர் அவருக்கு பலமுறை போன் செய்தும், அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து நண்பர்களுக்கு தகவல் அளித்தள்ளார்.
மோகனின் நண்பர்கள் போலீசாரின் உதவியுடன் ரேகா மோகன் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது, அவர் பிணமாக கிடந்துள்ளார். அவர் நவம்பர் 7 ம் தேதி இரவே இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.