பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1935 - நவம்பர் 13 அத்தான் என் அத்தான், முத்தான முத்தல்லவோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, நினைக்கத் தெரிந்த மனமே... போன்ற பல பாடல்களின் மூலம், தமிழர்களின் நெஞ்சங்களில் ரீங்காரமிடும் குரலுக்கு சொந்தக்காரர், பி.சுசீலா.ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில், புலப்பாக்க முந்தராவ், கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை பயின்றார். 1950ல், சென்னை வானொலியில், பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் துவங்கினார்.
பெற்ற தாய் படத்தின் மூலம், திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில், இதுவரை, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். டொக்டர் என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.