கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிரா ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'காற்று வெளியிடை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் ஊட்டியில் ஆரம்பமானது. அதன் பின்னர் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
'ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கப் போகும் படத்தைப் பற்றி முதலில் பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் என மலையாளம் முதல் ஹிந்தி வரை உள்ள பல்வேறு நடிகர், நடிகைகள் அவரது படத்தில் நடிக்கப் போவதாக மாறி மாறி செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. கடைசியாக ஜுலை மாதம் 7ம் தேதி கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நெருக்கமாக உள்ள டிசைனுடன் 'காற்று வெளியிடை' எனப் படப் பெயருடன் முதல் பார்வையை வெளியிட்டார் மணிரத்னம். அன்றே படப்பிடிப்பும் ஆரம்பமானது.
நேற்று இப்படத்தின் இரண்டாவது பார்வையையும் வெளியிட்டு படமும் 2017 மார்ச் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். அதோடு தெலுங்கில் 'டூயட்' என்ற பெயரிலும் இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்கள்.