சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடித்த முதல் படமான மீன் குழம்பும் மண்பானையும் படம் நேற்று வெளிவந்தது. இதையொட்டி காளிதாஸ் நேற்று அளித்த பேட்டி வருமாறு:
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. இதற்காக நடனம், சண்டை, நடிப்பு பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்டேன். நடிகரின் மகன் என்பதற்காக யாரும் வாய்ப்புத் தர மாட்டார்கள். உன் திறமையை நிரூபித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அப்பா சொன்னார் நான் நடிக்க முடிவான பிறகு அப்பா சொன்ன ஒரே அறிவுரை இதுதான்.
பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு பக்க கதை தான் முதலில் நடிக்க தொடங்கிய படம். மீன் குழம்பும் மண்பானையும் முதலில் வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள். அப்பாவின் நண்பர்களும், தமிழ் சினிமாவின் லெஜண்டுகளுமான பிரபு சார், கமல் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பிரபு சார் நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். கமல் சார் ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.
மலையாளப் படத்தில் அறிமுகமாகியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். இங்குதான் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நடிகர்களாகிவிட்டார்கள், சிலர் இயக்குனராகி விட்டார்கள். என்னை வளர்த்த மண்ணுக்குத்தான் முதல் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இப்போது மலையாளப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்பா அளவிற்கு என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவரது பெயரை காப்பாற்றினாலே போதும். என்கிறார் காளிதாஸ்.