பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரம்மி படத்திற்கு முன்பு அவர்களும் இவர்களும், அட்டகத்தி உள்பட சில படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து ரம்மி படத்தில்கூட போட்டோ செஷனுக்கு பிறகு நீக்கப்பட்டவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் திடீரென்று ரம்மி படத்திற்கு புக் பண்ணியிருந்த நடிகையின் பாட்டி இறந்து விட, அவர் சொன்னபடி படப்பிடிப்பு தளத்துக்கு வராமல் லீவு போட்டார். விளைவு, அந்த வேடத்துக்கு பொருந்த மாட்டார் என்று நிராகரித்த ஐஸ்வர்யா ராஜேஷையே மீண்டும் அழைத்து வாய்ப்பை கொடுத்தார் டைரக்டர் பாலகிருஷ்ணன். அப்படி அதிர்ஷ்டவசமாக ரம்மி படத்திற்குள் நுழைந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் இடம்பெற்ற கூடமேல கூட வச்சி என்ற பாடலே அவரை பிரபலப்படுத்தி பின்னர் பெரிய நடிகையாகி விட்டார்.
முக்கியமாக, மீண்டும் பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களிலும் விஜய்சேதுபதியுடன் நடித்து பேசப்பட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் தற்போது விஜய்சேதுபதியுடன் பல முன்னணி நடிகைகள் கமிட்டாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அவருடன் நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நான்தான் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. அவர் நடிக்கும் படங்களில் எனக்கான வாய்ப்புகள் இருந்தால் அந்த படங்களின் டைரக்டர்கள் என்னை அழைப்பார்கள். தற்போது அவருடன் நடிக்கும்படங்கள் இல்லை. என்றாலும். விரைவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.