ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார்.. அந்தப்படத்தின் கதையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனரான அஞ்சலி மேனன் எழுதுவார் என்றும் அறிவித்தார்.. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப்படம் ட்ராப் ஆனது.. பிரதாப் போத்தனோ, அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை ரொம்பவே சுமாராக இருந்தது என குற்றம் சாட்டினார்.. ஆனால் அதற்கு அஞ்சலி மேனன் அப்போது பெரிய பதிலடி ஒன்றும் தரவில்லை..
பிரதாப் போத்தனோ இந்தப்படத்தின் வேலைகளால் தனக்கு ஒரு வருடம் வீணாகிவிட்டதாக புலம்பி வருகிறார். துல்கர் சம்மதம் சொன்னால் இப்போதுகூட அவரது படத்தை இயக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதே படத்தை அஞ்சலி மேனன் தானே துல்கர் சல்மானை வைத்து இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது.. இந்த விஷயத்தில் துல்கர் யார் பக்கம் ஆதரவாக் நிற்பார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. காரணம் ஏற்கனவே துல்கருக்கு 'உஸ்தாத் ஹோட்டல்' மற்றும் 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் வெற்றிகளை தந்தவர் தான் அஞ்சலி மேனன் அதனால் அஞ்சலிக்குத்தான் துல்கரின் ஆதரவு கிடைக்கும் என்கிறார்கள்.