ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைதளமான, டுவிட்டர் வாயிலாக பாலியல் தொல்லை தரும், மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போலீசில் நடிகை ஸ்ருதி புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கமலஹாசன் - சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதி; நடிகை. தமிழில் ஏழாம் அறிவு உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். அவர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரவீன் ஆண்டனி என்பவர் அளித்துள்ள புகார்: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி. பாடகர், இசை அமைப்பாளர் என்றும் அறியப்பட்டவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர், சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதி மீது அவதுாறு பரப்பும் வகையிலான படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அத்துடன், மன ரீதியாக ஸ்ருதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஸ்ருதியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும், குருபிரசாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.