டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் அஜித், நயன்தாரா இருவரும்தான் தாங்கள் நடித்த படங்களின் பிரஸ்மீட்களில்கூட கலந்து கொள்வதில்லை. இந்த விசயத்தில் முதலில் அஜித்தைப்பற்றி விமர்சனம் செய்தவர்கள்கூட இப்போது அதை விட்டு விட்டனர். நயன்தாராவை சமீபத்தில் சிலர் விமர்சித்தபோது, நான் எந்த படவிழாக்களில் கலந்து கொண்டாலும் அந்த படங்கள் வெற்றி பெறுவதில்லை. அதனால்தான் நான் நடிக்கிற படங்களும் ஓடாமல் போய்விடக்கூடாதே என்பதற்காகவே விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கூறினார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கெளதம்மேனன் இயக்கியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது சிம்பு மட்டும் ஆஜராகவில்லை. அப்போது பேசிய கெளதம்மேனன், காலை 9 மணிக்கு படப்பிடிப்பை நான் தொடங்கி விடுவேன். ஆனால் சிம்பு மதியம் 2 மணிக்குத்தான் வருவார். ஆனால் சந்தோசமாக நடித்துக்கொடுப்பார். மற்றவர்கள் மாதிரி டார்ச்சரெல்லாம் பண்ண மாட்டார் என்று சிம்புவை பற்றிய கிண்டலாக பேசினார்.
ஆனால் சிம்பு ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதைபற்றி கேட்டபோது, அவர் பிரஸ்ஸை சந்தித்து விட்டதாக சொன்னார் என்று முடித்துக்கொண்டார். ஆனால், இப்போது அன்றைய தினம் தான் பிரஸ்மீட்டில் கலந்து கொள்ளாததற்கு காரணம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார். ஆக, அஜித், நயன்தாரா பாணிக்கு தான் மாறவில்லை என்பது போன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார் சிம்பு.