ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையுலகத்தில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆனாலும், தெலுங்குத் திரையுலகத்துடன் ஒப்பிடும் போது, இங்கு கொஞ்சம் குறைவுதான். உண்மையாகத் திறமையிருப்பவர்கள் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும் என்பது நியதி. தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் மகன், ஹீரோவின் மகன், ஹீரோயினின் மகன் எனப் பல வாரிசுகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் புது வாரிசாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இப்போது நடிக்க வந்துள்ளார்.
'மிருதன்' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'டிக் டிக் டிக்'. இப்படத்தில்தான் ஆரவ், அப்பா ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். “என்னுடைய வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள். நானும், என் மகன் ஆரவ்வும் 'டிக் டிக் டிக்' படத்தில் ஒன்றாக நடிக்கிறோம். கடவுள் அவனை வாழ்த்தட்டும,” என ஜெயம் ரவி தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சற்று முன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மற்ற முன்னணி ஹீரோக்களுக்கும் மகன்கள் இருக்கிறார்கள். அனைவருமே சிறுவர்கள்தான். இருந்தாலும் ஜெயம் ரவி, தன் மகன் ஆரவ்வை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.
இந்தப் படத்துடன் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'போகன்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.