மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்து, இயக்கி உள்ள படம் அச்சம் என்பது மடமையடா. சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், டிரைலரும் டிரண்டிங் ஆகியுள்ளது.
படத்தின் கடைசி பாடல் காட்சியின் படப்பிடிப்புக்கு சிம்பு வர மறுத்ததால் 4 மாதங்கள் வரை படம் தேங்கியது. இதனால் மனம் நொந்த கவுதம் வாசுதேவ மேனன், சிம்பு மீது குற்றம் சாட்டினார். பின்னர் இதுகுறித்த பேசிய சிம்பு "அவர் என்னை குறை சொன்னாலும் நான் அவரை குறை சொல்ல மாட்டேன். என்னால் நேரத்துக்கு பின்னால் ஓட முடியாது. என்ன இஷ்டப்படிதான் நடிப்பேன். என்னை புரிந்தவர்கள் என்னை வைத்து படம் எடுத்தால் போதும்" என்றார்.
இப்போது கவுதம் வாசுதேவ் மேனனும் எனக்கும், சிம்புவுக்கும் இடையில் எதுவும் இல்லை என்று கூறியிருருக்கிறார். இது தொடாடிபாக அவர் கூறியிருப்பதாவது: சிம்புவுக்கும் எனக்கும் சின்ன சின்ன மன வருத்தங்கள் இருந்தது உண்மை. ஆனால் அது இப்போது சரியாகிவிட்டது. தொடர்ச்சியாக 16 மணி நேரம் டப்பிங் பேசிக் கொடுத்தார். என்னை புரிந்து கொண்ட ஒரே ஆள் நீங்கதான் என்று என்னை பாராட்டிவிட்டுச் சென்றார். சில கஷ்டங்கள் இருந்தாலும் படம் சூப்பராக வந்திருக்கிறது. படம் வியாபாரமும் ஆகிவிட்டது. எல்லாம் சரியாக இருந்தால் அடுத்தும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவேன். எல்லா பிரச்சினைக்கும் காலம்தான் சிறந்த மருந்து என்பார்கள். அதை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன். என்கிறார் கவுதம் மேனன்.
ஆனாலும் சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்தின் புரமோசனுக்கு வரவில்லை என்பதும், அவர் தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.