டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியில் இப்போது பயோபிக் படங்களின் சீசன். யாருடைய வரலாற்றை சினிமாவாக எடுத்தாலும் வெற்றி பெறுகிறது. அசாருதீன் பற்றிய படம் தவிர மற்ற அனைத்து படங்களும் வெற்றிதான். சமீபத்தில் கூட மகேந்திர சிங் தோனி, அன்னா ஹசாரேவின் வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தன. அடுத்து கேப்டன் லட்சுமி ஷெகாலின் வாழ்க்கையும் சினிமாவாகிறது.
இந்த நிலையில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. இந்தியாவின் பிரபலமான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர். இவர் கோர்ட்டுக்கு வந்தால் நீதிபதிகளே கொஞ்சம் ஜர்க் ஆவார்கள். நீதிபதியாகும் பல வாய்ப்புகளை மறுத்து தொடர்ந்து வழக்கறிஞராகவே இருப்பவர். தற்போது 93 வயதிலும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.
ராம்ஜெத் மலானியின் வாழ்க்கையை ரோணி ஸ்குரூவாலா, குணால் கேமு, மற்றும் நடிகை சோஹா அலிகான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுகுறித்து சோஹா அலிகான் கூறியிருப்பதாவது:
ராம்ஜெத்மலானியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது திறமையை யாரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பேன். அவரது வாழ்க்கையை எனது நண்பர் ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை சொன்னார். ஒரு சினிமாவுக்குரிய சுவாரஸ்யம் ராம்ஜெத்மலானி வாழ்க்கையில் இருப்பதாக தோன்றியது. நண்பர்களுடன் இணைந்து அவரது வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க முடிவு செய்தோம். இதற்கு அவரது அனுமதியையும் பெற்று விட்டோம். நடிகர் நடிகைகள் தேர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றார் சோஹா அலிகான்.