ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில வருடங்களுக்கு முன் தமிழில் அஜீத் நடித்த பில்லா-2 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கேரள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய ஹீரோவின் படமாக அமைந்ததால் அந்த படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார் பார்வதி. ஆனால், படம் வந்த பிறகு பார்த்தால் அடுத்து எந்தவொரு இயக்குனரும் அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை. இவர்தான் தற்போது மலையாள ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் செமையாக வாங்கிக்கட்டி கொண்டுள்ளார்.
அப்படி என்ன செய்தாராம் இந்த ஓமனா..? சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், ஒரே நேரத்தில் மம்முட்டி அல்லது மோகன்லால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் எதை ஏற்பீர்கள் என்று கேட்டார். நடிகைகளிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்பதற்கென்றே சில தொகுப்பாளர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். போகட்டும் அதற்கு இந்த ஓமனக்குட்டனாவது அழகாக பதில் சொல்லி சமாளித்திருக்கலாம்.
ஆனால் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு துல்கர் சல்மானுடன் நடிக்கவே ஆசை என கூறியுள்ளார் அம்மணி. இந்த பதிலால் கடுப்பான மோகன்லால் மற்றும் மம்முட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்னொரு நடிகர் பெயரை சொல்லி புத்திசாலித்தனம் காட்ட முயன்ற ஓமனக்குட்டனை சோஷியல் மீடியாவில் விதவிதமாக அர்ச்சித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல அவர் நடித்த ஒரே மலையாளப்படமான 'கே-க்யூ' பற்றியும் எதுவும் சொல்லாததில் ரசிகர்களுக்கு இன்னும் கோபம். ஏன் தான் அப்படி ஒரு பதிலை சொன்னோம் என ஆகிவிட்டதாம் பார்வதி ஓமனக்குட்டனுக்கு.