மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கும் இயக்குனர் வினயனுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம் தான். ஆம்.. தமிழில் காசி, அற்புத தீவு படங்களை கொடுத்த அதே வினயன் தான். காரணம் வினயனுக்கும் மோகன்லாலுக்கும் பலவருடமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.. அதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதத்தில் மோகன்லால் பற்றியோ, அவரது படங்கள் பற்றியோ சில சர்ச்சையான கருத்துக்களை இயக்குனர் வினயன் வெளியிடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, நடிகர் கலாபவன் மணியின் இரங்கல் கூட்டத்திற்கு இயக்குனர் வினயனை அழைக்கவில்லை என்றும் அதற்கு மோகன்லால் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில் தான், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'புலி முருகன்' படத்தை பற்றியும் அதில் நடித்துள்ள மோகன்லாலின் கடின உழைப்பை பற்றியும் பாராட்டியுள்ளார் வினயன்.. இந்த வயதிலும் மோகன்லாலின் அர்ப்பணிப்பு உணர்வு பிரமிக்க வைப்பதாகவும், 'புலி முருகன்' படத்தின் இயக்குனர் வைசாக்கின் அதீத திறமை தன்னை சிலிர்க்க வைப்பதாகவும் கூறியுள்ளார் வினயன். அதுமட்டுமல்ல100 கோடி வசூலை ஈட்டிய 'புலி முருகன்' வரும் நாட்களில் 150 கொடியையும் தாண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, மலையாள சினிமாவின் தரத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்ற தயாரிப்பாளர் தோமிச்சன் போன்றவர்கள், மலையாள சினிமாவில் இன்னும் அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.. தான் 'அல்புத தீவு' மற்றும் 'லிட்டில் சூப்பர்மேன்' ஆகிய படங்களை பிரமாண்டமாக உருவாக்க முற்பட்டபோது தயாரிப்பாளர்கள் பணம் செலவழிக்க பயந்ததையும் இதுபோன்ற தயாரிப்பாளர் அப்போது தனக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தையும் வெளிபடுத்தியுள்ளார் இயக்குனர்வினயன்.