தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் கதை, வசனம் எழுத சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கப் போகும் படம்தான் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்று இதற்கு முன் செய்திகள் வெளியானது. அதற்காக தனது குழுவினருடன் சௌந்தர்யா லொகேஷன்களைக் கூட பார்த்து முடித்திருந்தார். ஆனால், இன்று காலை திடீரென 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சௌந்தர்யா அறிவித்தார். அந்தப் படத்தின் நாயகானக தனுஷ் நடிக்கப் போகிறார். அனிருத், ஷான் ரோல்டன் இசையமைக்கப் போகிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கியல் தயாராக உள்ளது. டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறப் போவதாக அறிவித்தார்கள்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ன ஆனது, ஏன் அந்தப் படத்தை விட்டு விட்டு 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்குத் தாவினார்கள் என்று தெரியவில்லை. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தாலும் அந்தப் படத்தை தனுஷ்தான் முழுவதுமாக இயக்கினார் என திரையுலகத்தில் ஏற்கெனவே சொல்வார்கள். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ஒரு வேளை 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தைத்தான் 'வேலையில்லா பட்டதாரி 2' எனவும் பெயரை மாற்றியிருக்கலாம் என்கிறார்கள்.
தனுஷ் இப்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'பவர் பாண்டி' படத்தை இயக்கி வருகிறார்.