இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் ஆண்டனி நடிப்பில் நவம்பர் 18-ந்தேதி வெளியாகும் படம் சைத்தான். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். பிச்சைக்காரனுக்கு முன்பே தொடங்கப் பட்ட இந்த படம் ஒன்றரை ஆண்டுகளாக தயாராகி வந்தது. மேலும், இந்த படத்தை இயக்கி முடித்ததும் சிபிராஜ் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தற்போது தொடங்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
சைத்தான் படம் குறித்து அவர் கூறுகையில், சைத்தான் படம் ஒரு சைக்காலஜிகல் ட்ரீட்மென்ட். கதைப்படி சாப்ட்வேர் இஞ்சினியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி உளவியல்ரீதியாக பாதிக்கப்படும்போது அவரது வெளிப்பாடுகள்தான் இந்த படம். வழக்கமான படம்தான் என்றாலும் விசுவல் வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக ஹாரர் படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட திரில்லர் படமாக இருக்கும்.
அதோடு, விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அதோடு இந்த படத்தில் நடித்து வரும்போது சைத்தானும் பிச்சைக்காரன் மாதிரி பெரிய படமாக வரும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் சொன்னது போலவே முதலில் தமிழில் மட்டுமே உருவாகயிருந்த இந்த படம், பிச்சைக்காரன் ஹிட் காரணமாக தற்போது தெலுங்கிலும் வளர்ந்து நிற்கிறது. அதோடு, இரண்டு மொழிகளிலுமே ஒரே நாளில் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சொன்னது போலவே இப்போது சைத்தான் பெரிய படமாகி விட்டது என்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.