ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக சமூகவலைதள வாசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் திரைத்துறையில் கேட்கவே வேண்டாம். திரைத்துறையில் இருக்கும் சிலரே அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களது படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆஹா ஓஹோ... என புகழும்படி செய்து வருகின்றனர். இதுபோன்ற சமூக வலைதள வாசிகளை வளர்த்துவிட்டவர்களில் முக்கியமானவர் ஞானவேல்ராஜா. இதை நிரூபிக்கும் வகையில் டுவிட்டரில் கூவுபர்களையும், ஒருசில பத்திரிகையாளர்களை மட்டுமே அழைத்து ‛எஸ்-3' படத்தின் டீசரை அவர்களுக்கு போட்டு காண்பித்திருக்கிறார். படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு தான் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னரே டீசர் பார்த்த சமூலவலைதள வாசிகள், டீசர் பற்றி புகழ தொடங்கியிருக்கிறார்.
அதில் ஒருவர் எஸ் படத்தின் டீசரை ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் பார்த்தேன், நெருப்புடா எனும் அளவுக்கு இருந்தது. பக்கா ஆக்ஷ்ன் கமர்ஷியல், மாஸ் பஞ்ச் டயலாக் எல்லாம் உள்ளது. நிச்சயம் டிச.,16ம் தேதி தியேட்டரில் சவுண்ட் பறக்கும் என்று கூறியிருக்கிறார்.
இன்னொருவரோ, மாஸ் பஞ்ச்லைன்ஸ், ஆக்ஷ்ன் எல்லாம் இருக்கு, டீசர் மிகவும் பிரமாண்டமாய் உள்ளது. துரைசிங்கம் வேட்டை என்று கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் ஒரேநேரத்தில் டீசர் போட்டு காட்டாமல் ஒருசிலருக்கு மட்டும் இதுபோன்ற டீசரை காண்பித்து அவர்களை ஆஹா ஓஹோ என புகழ சொல்லும்படி ஞானவேல்ராஜா செய்திருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுப்பற்றி பத்திரிகையாளர்கள் சிலர் பேசும்போது... சமூகவலைதள பயன்பாடு அவசியம் தான். இதை ஞானவேல்ராஜா போன்றவர்கள் வளர்த்துவிடுவது ஒன்றும் புதிதல்ல, பல படங்களில் இதை செய்து வருகின்றனர். நாங்கள் கேட்டு கொள்வது எல்லா பத்திரிகையாளர்களையும் சமமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது தான். என்னதான் அவர்கள் படங்களை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்தாலும் உண்மைகளை மறைத்துவிட முடியாது. அதற்கு உதாரணம் 24 படம். இந்தப்படத்திற்கும் அவர் இதேப்போன்று தான் செலவும் செய்தார், அவர் நினைத்திருந்தால் அந்தப்படத்தை ஓட வைத்திருக்கலாமே... ஏன் முடியவில்லை என்று கூறுகின்றனர் அனுபவமிக்க சில உண்மை பத்திரிகையாளர்கள்.
இதுஒருபுறம் இருக்க ஞானவேல்ராஜாவின் பிரமாண்ட படங்கள் சில அவருக்கு தோல்வியை தழுவியதால் அவர் பலகோடி கடனில் இருப்பதாலும், அதனால் தான் தொடர்ந்து ஸ்டியோகிரீன் தயாரிப்பில் நடித்து வந்த சூர்யா, தனியாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஞானவேல்ராஜா - சூர்யா கூட்டணியில் உருவாகும் கடைசிப்படம் எஸ்-3 ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.