டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆதி லட்சுமி பிலிம்ஸ் சார்பில் செல்வம், ராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ஆக்கம். ராவன், டெல்னா டேவிஸ், என்ற புதுமுகங்களுடன் ரஞ்சித், டாக்டர் சீனிவாசன் நடிக்கிறார்கள். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:
இது நான் நேரில் பார்த்த ஒரு கொலைகார குடும்பத்தின் கதை. ஒரு நாள் வட சென்னையில் நான் சென்ற வழியில் ஒரு சாவு ஊர்வலம் சென்றது. அதில் ஒரு ஆணும், பெண்ணும் வெறித்தனமாக ஆடிக் கொண்டு சென்றார்கள். அந்த பெண்ணின் இடுப்பில் கத்தி இருந்தது. அவர்களை பற்றி விசாரித்தேன். இருவரும் அம்மா, மகன் கூலிக்காக ஆளை கொல்வது, கை, கால் எடுப்பதுதான் அவர்களின் குடும்ப தொழில் என்றார்கள். பின்பு அந்த குடும்பத்தை ரகசியமாக பாலோபண்ணி உருவானதுதான் இந்தக் கதை. இந்த குடும்பத்திலிருந்து வருகிறவர்தான் ஹீரோ.
அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு இளைஞனுக்கு வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம். இந்த இரண்டு கேரக்டர்களும் மோதும்போது என்ன நடக்கிறது என்பது கதை. ஹீரோயின் டெல்னா டேவிஸ் மீன் வெட்டும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் உள்பட அனைவருக்கும் முறையான நடிப்பு பயிற்சி கொடுத்து ஒத்திகை பார்த்துதான் படப்பிடிப்புக்கே சென்றோம். நேர்மையான வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்பது படம் சொல்லும் மேசேஜ். இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. என்றார் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.